;
Athirady Tamil News

இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

0

இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.

நணபர்களுடன் காலி – பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பெந்தோட்டை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.