;
Athirady Tamil News

பிரித்தானியாவையே மூழ்கடிக்கும் சாத்தான் 2 ஏவுகணை – அதிரடியாக களமிறக்கும் ரஷ்யா !!

0

நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யா தற்போது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாத்தான் 2 என அழைக்கப்படும் குறித்த ஏவுகணையை போரில் களமிறக்க தயார் நிலையில் வைத்திருக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

208 தொன் எடை கொண்ட அந்த ஏவுகணையானது 114 அடி நீளம் கொண்டது எனவும் மணிக்கு 15,880 மைல்கள் வேகத்தில் 11,000 மைல்கள் தொலைவு பாயக்கூடியது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அந்த ஏவுகணையானது ஒரே ஒரு தாக்குதலில் பிரித்தானியாவை மூழ்கடிக்க போதுமானது எனவும் கூறுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் நோக்கில் சாத்தான் 2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருந்து 1,600 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிரித்தானியாவை வெறும் 6 நிமிடங்களில் அந்த ஏவுகணையால் சென்றடைய முடியும். மேற்கத்திய நாடுகளில் அந்த ஏவுகணைக்கு ஒப்பான ஆயுதம் என எதுவும் இல்லை என்றே கூறுகின்றனர்.

2022ல் இருந்தே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மர்மமான முறையில் தாமதம் செய்யப்பட்டது.

மேலும், சாத்தான் 2 ஏவுகணையானது ஜூன் மாதத்தில் இருந்து களமிறக்கப்படும் என விளாடிமிர் புடின் அறிவித்திருந்தாலும், தற்போது தான் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.