;
Athirady Tamil News

தொலைத்தொடர்பு கம்பத்துடன் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதி இளைஞர் !! (PHOTOS)

0

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதி இளைஞர் ஒருவர் தலத்திலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளார்

மேலும் தெரியவருவதாவது சண்டிலிப்பாய் பகுதியில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த பத்மநாதன் வசீகரன் எனும் 20 வயதான சில்லாலை வடக்கைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன்னால் சென்ற மோட்டார் வாகனத்துடன் மோதுவதை தவிர்க்க மோட்டார் வாகனத்தை திருப்பிய நிலையில் முன்னிருந்த தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி தலத்தில் மரணமடைந்தார்.

இந்நிலையில் மோட்டார் வாகனத்தின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில் பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.