;
Athirady Tamil News

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் 3 மகள்களின் கழுத்தை அறுத்து தந்தை தூக்குப்போட்டு தற்கொலை!!

0

கேரள மாநிலம் கோட்டயம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 40). இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா (13), அனாமிகா (10), அமேயா (7) ஆகிய 3 பேரையும் பராமரித்து வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு ஜோமோன் தனது 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்றுள்ளார். பின்பு அவர், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையால் கழுத்து அறுக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

இதனை அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்று காலை பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளையும் மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஜோமோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், எதற்காக 3 குழந்தைகளையும் கழுத்து அறுத்து கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டயத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.