;
Athirady Tamil News

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும் – விக்னேஸ்வரன்!!!

0

இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் மன வேதனையை தருகிறது.

நான் நீதிபதியாக செயற்பட்டவன் என்ற நீதியில் விசாரணை முடிவுறாமல் இவர்கள் தான் குற்றவாளி எனக் கூற முடியாது

தாதியர்களின் தவறே சிறுமியின் கை துண்டிக்க பிரதான காரணம் என செய்திகள் வெளியாகிய நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுமி தனது கல்விக்காலம் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் மற்ற இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுமியின் விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் இன்று வழக்கு!!

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் ; நீதி கோரி பல தரப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ள பெற்றோர்!!

எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம்!! (VIDEO)

யாழில். மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம்!!

யாழ். போதனா வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் இடது கையை இழந்த சிறுமி : மூவரடங்கிய விசாரணைக் குழு நியமிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.