;
Athirady Tamil News

பாரதியாரின் கொள்ளுப் பேரனுக்கு கலாசாலையில் வரவேற்பு!! (PHOTOS)

0

பாரதியாரின் கொள்ளுப் பேரனின் யாழ்ப்பாண வருகைக்கான வரவேற்பு வைபவம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு 07.09.2023 இன்று அதிபர் திரு ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது

பாரதியாரின் கொள்ளுப்பேரனும் பொறியியலாளரும் பிரபல கர்நாடக இசைப் பாடகருமாகிய டாக்டர் ராஜ்குமார் பாரதி கலந்து சிறப்பித்தார்.

அவருடன் கொழும்பின் பிரபல நடன ஆசிரியர் திவ்யா சுஜேன் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் முன்னிலைப்படுத்தினார். அதிதி அறிமுக உரையினை விரிவுரையாளர் கு.பாலசண்முகன் ஆற்றினார்.

கலாசாலையின் அதிபர் பிரதி அதிபர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் ராஜ்குமார் பாரதிக்கான கௌரவத்தையும் யாழ்ப்பாண வருகையை அடையாளப்படுத்தும் நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தனர்.

ராஜ்குமார் பாரதி – தனது உரையின்போது பாரதியார் பாடல்களை தனது இனிய குரலில் பாடியும் இளம் தலைமுறையினரிடையே பாரதியாரின் கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கான உத்திகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.