;
Athirady Tamil News

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!!

0

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராமன்றில் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பில் கடந்த இரண்டு நாட்களும் விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

எதிர்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாசுதேவ நாணயக்காரவும் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.