;
Athirady Tamil News

தியாக தீபத்தின் நினைவேந்தல் யாழ்.பல்கலையிலும் ஆரம்பம்!! (PHOTOS)

0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாணவர் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது

இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாகதீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் , பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.