;
Athirady Tamil News

பருத்தித்துறை நீதிமன்றும் தடை விதிக்க மறுப்பு!!

0

தியாக தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை பொலிசார் தாக்கல் செய்த மனுவை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள், ஊர்தி பவனிகளை நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை பொலிசார் குறித்த மனுவை தாக்கல் செய்தனர்.

வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய பொலிசாருக்கு அதிகாரமுள்ளதை சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதவான், அமைதியான நினைவு நிகழ்வுகளை தடுக்க முடியாதென உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.