;
Athirady Tamil News

விசாகப்பட்டினத்தில் மலைப்பாம்புகளை கையில் தொங்கவிட்டு சாகசம்!!

0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரங்கா. இவர் எந்த வகை பாம்பாக இருந்தாலும் திறமையாக பிடிப்பதில் வல்லவர். விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பாம்புகளை பிடித்துள்ளார். ரங்கா சிறிய வகை பாம்புகள் முதல் பெரிய வகை பாம்புகளை பிடித்துச் சென்று நடுக்காட்டில் விடுவது வழக்கம். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் மலை பாம்பு புகுந்ததாக ரங்காவுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ரங்கா வீட்டில் இருந்த 4 மலை பாம்புகளை பிடித்தார். பின்னர் பிடிக்கப்பட்ட பாம்புகளை கையில் சுற்றிக்கொண்டு சாகசம் செய்தார். இதனை வேடிக்கை பார்த்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிட்டனர். தற்போது ரங்கா பாம்புகளை வைத்து சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.