;
Athirady Tamil News

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!! (PHOTOS)

0

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் தாயகம் எங்கும் உணர்ச்சியுடன் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

அதன் போது, யாழ் நகர் பகுதி, மருதனார்மடம் சந்தை பகுதி மற்றும் நல்லூர் தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.