;
Athirady Tamil News

வானக சாரதிகளிடம் காவல்துறை விடுத்த கோரிக்கை

0

வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பு – சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அதேநேரம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விபத்துகளில் ஆயிரத்து 733 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.