;
Athirady Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

0

புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரின் ஜாமீன் மனு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.இதனால் அவர் புழல் சிறையிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு
புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சிறை மருத்துவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அறிவுறுத்தினர். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்புள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.