;
Athirady Tamil News

யாழில் முகநூல் பதிவால் இடம்பெற்ற வாள்வெட்டு

0

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் பதிவொன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் (8) இரவு 8.30 மணியளவில் நல்லூர், அரசடி சந்தி, மணல்தரை வீதி பகுதியில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரபல ரௌடி மற்றும் அவரது 3 அடியாட்களுடன் காரில் வந்து, வாள் வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் 28 வயதான ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.