;
Athirady Tamil News

டிப்பர் ரக வாகனம் மோதுண்டதில் கடமையில் இருந்த பொலிஸார் உயிரிழப்பு

0

கொழும்பு – குருநாகல் வீதியின் புஹுரிய சந்தியில் டிப்பர் ரக வாகனம் மோதுண்டதில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை நிறுத்தி நேற்றிரவு சோதனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கந்தளாயில் இருந்து கடுவளை நோக்கி மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மகிழுந்து ஒன்று மோதியதில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.