;
Athirady Tamil News

சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றம்: இலங்கையும் பிரித்தானியாவும் எட்டிய ஒப்பந்தம்

0

பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில், பிரித்தானியாவும் இலங்கையும் தற்போது ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் துணைச் செயலாளர் ரிச்சர்ட் ஹோல்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான வினாவுக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே, சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்ற விரும்பும் நபர்களுக்கு ஒரு சுமுகமான செயல்முறையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளர்.

பரஸ்பர உடன்படிக்கை
மேலும் இது தொடர்பில் கருத்த தெரிவித்த அவர், “ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிகளிலுள்ள நாடுகளில் பயன்படுத்தப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி பிரித்தானியாவில் வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிகளிலுள்ள அனைத்து நாடுகளிலும் பிரித்தானிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தும் வகையில் பரஸ்பர உடன்படிக்கை நடைமுறையில் உள்ளது.

ஐரோப்பாவுக்கு வெளியில் மேலும் 22 நாடுகளுடனும் இத்தகைய பரஸ்பர உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது, இலங்கை உட்பட மேலும் ஏழு நாடுகளுடன் பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்துக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.