;
Athirady Tamil News

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்தொழிலாளர்கள் 37 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 பேரும், மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 பேரும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடம் இருந்து மொத்தமாக 05 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட உடைமைகள்
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும் குறித்த மீனவர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உடைமைகளையும், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் (2023) இதுவரை 27 மீன்பிடி படகுகளும், 174 இந்திய மீனவர்களும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.