;
Athirady Tamil News

கிழக்கு கடற்கரையில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்

0

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு நேற்றைய தினம் (30.10.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய வயோதிபர்
வீட்டில் ஏற்பட்ட முரன்பாடுகளையடுத்து வீட்டை விட்டு வெளியேறி வந்த குறிப்பிட்ட நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் காத்ததான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.