;
Athirady Tamil News

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை வெறுப்பூட்டிய பெரும்பான்மையினத்தவர்கள்: யாழ் தையிட்டியில் பதற்றம்

0

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் கஜினமகா உற்ச நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவிக்கப்பட்ட காவல்துறையினர்
இதன்போது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டனர்.

இதன்போது அதிகளவிலான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.