;
Athirady Tamil News

கொழும்பில் மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்!

0

கொழும்பில் – கொள்ளுப்பிட்டி ஆர். தி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளன.

முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்ததன் காரணமாகவே இந்த அசம்பாவிதங்களுக்கு இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.