;
Athirady Tamil News

5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயார்

0

இலங்கையிலிருந்து 5 ஆயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை வீழ்ச்சி அடையும்
5 ஆயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சி அடையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வைத்தியர்களின் தேவைகளைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.