;
Athirady Tamil News

தபால் வேலை நிறுத்த போராட்டம் இன்றுடன் நிறைவு!

0

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (09) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று முன்தினம் (7) நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளது.

அதி விசேட வர்த்தமானி
தபால் ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தபால் திணைக்களம், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.