;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி; உதவிகோரும் பொலிஸார்

0

வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து சம்பவம் புத்தளம் – சிலாபம் பிரதேசத்தில் அம்மன் கோயில் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுமார் 75 வயதுடைய 04 அடி உயரம் 06 அங்குலம் கொண்ட நீல நிற உடையணிந்த பெண் ஆவார்.

பெண் தொடர்பில் எந்த தகவலும் இல்லை
குருநாகல் பிரதேசத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் பெண் ஆகியோர் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவரது சடலம் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.