;
Athirady Tamil News

யானை தாக்கி குடும்ப பெண் பரிதாப மரணம்

0

காட்டு யானை தாக்கி குடும்ப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஹிங்குராங்கொட, பாலுவேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணம்
சந்துசிறி மல்காந்தி என்ற 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

இவர் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் பணியாற்றியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.