;
Athirady Tamil News

வெளிநாட்டு பிரஜைகளின் வருகையால் அதிருப்தியடையும் கனடிய மக்கள்!

0

கனடாவிற்கு வெளிநாட்டு பிரஜைகள் வருகை தருவது குறித்து முன்னணி நிறுவனமொன்று பொதுமக்களிடம் கருத்து கணிப்பொன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பெரும்பான்மையான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கருத்து கணிப்பின் படி,

குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வு
“குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வானது, வீட்டுப் பிரச்சினை உக்கிரமடையச் செய்துள்ளது.

நாட்டுக்குள் கூடுதலாக குடியேறிகள் வருவதனால் வீடுகள் மற்றும் சுகாதார நலன்கள் என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் கல்வித்துறையிலும் பாதக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.” என எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

எனினும், குடியேறிகளின் வருகையானது ஆளணி வளத்தை அதிகரிக்கும் எனவும், இதன் மூலம் வரி வருமானங்களை அதிகரித்துக்கொள்ள முடியும் என கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மற்றுமொரு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.