;
Athirady Tamil News

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா முக்கிய தகவல்: வெளியாகியுள்ள புகைப்படம்

0

கேப்டன் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் விஜயகாந்த்
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து பல்வேறு மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இணையத்தில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மருத்துவமனையில் பார்க்க சென்ற நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர். கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட திரையுலகத்தினர், தயவுசெய்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.