;
Athirady Tamil News

இலங்கை கல்வி அமைச்சர் சுசில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0

எதிர்வரும் டிசம்பருக்குள் (2024) இந்த வருடத்திற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி விடுமுறை விடப்பட்டு 19ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகும்.

விடுமுறை முடிந்து பாடசாலைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதல் தவணை செயற்பாடுகள் பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும்.

கடந்த ஆண்டு, ஏப்ரலில் புதிய ஆண்டிற்கான முதல் தவணை செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தது. நாங்கள் அதை முன்னோக்கி கொண்டு வந்தோம்.

இருப்பினும், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இவ்வருடத்திற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.