;
Athirady Tamil News

யாழ் நீதிமன்றத்தில் மதுபோதையில் இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர்!

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த காவல்துறை உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(4) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை காவல் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார்.

விசாரணைகளுக்கு இடையூறு
இந்நிலையில், குறித்த நபர் மதுபோதையில் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்த காவல்துறையினர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தினர்.

சந்தேக நபரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.