;
Athirady Tamil News

மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

0

இந்திய மாநிலம் ஒடிசாவில் இளம்பெண்ணொருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சகோதரரின் செயல்
ஒடிசா மாநிலம் கந்தமாலின் சகபடா கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பாஞ்சலி(25). இவர் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

அதே ஊரில் புஷ்பாஞ்சலியின் சகோதரர் பரேஷ் தனது மனைவியுடன் வேறொரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் திகதி காட்டுப்பகுதியில் புஷ்பலதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக பரேஷ் தனது சகோதரியை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிவு வெளியாகி பொலிஸாருக்கு அதிர்ச்சி அளித்தது.

வெட்டிக்கொன்ற சகோதரர்
உயிரிழந்த புஷ்பாஞ்சலி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கோடரியால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பரேஷ் தனது சகோதரியை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பரேஷ் தனது மனைவியின் சகோதரியுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார்.

இதனை புஷ்பாஞ்சலி அறிந்து பரேஷை மிரட்டியுள்ளார். இதன் காரணமாக பரேஷ் தனது சகோதரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, காட்டுப்பகுதிக்கு புஷ்பாஞ்சலி தனியாக சென்றபோது அவரை பின்தொடர்ந்த பரேஷ், தனது 4 நண்பர்களை வரவழைத்து சகோதரியை கூட்டு வன்புணர்வு செய்ய வைத்துள்ளார். அதன் பின்னர் அவரை கழுத்தை நெரித்து, கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பரேஷின் வாக்குமூலத்தை பெற்ற பொலிஸார் அவரையும், நான்கு நண்பர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.