;
Athirady Tamil News

கட்டடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட கை குண்டு

0

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை காவல்துறையினருக்கு கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரியால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அது கை குண்டு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு
இந்நிலையில், தெஹிவளை -124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள 11 மாடி கட்டிடத்தின் 5வது மாடியில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, தெஹிவளை காவல்நிலையத்தால் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து, காவல்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.