;
Athirady Tamil News

தண்டனை சட்டக்கோவையின் அபராத தொகையில் திருத்தம்! அமைச்சரவை அனுமதி

0

தண்டனை சட்டக்கோவையின் அபராத தொகை திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை அனுமதி
தற்போதைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது, விதிக்கப்படும் அபராத தொகை குறைவாக உள்ளதால் தண்டனை சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

அதன்படி, புதிய சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், தண்டனை சட்டக்கோவை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.