;
Athirady Tamil News

நாற்றமெடுக்கும் மஹரகம நகரம்; மக்கள் விசனம்

0

நீண்ட நாட்களாக மஹரகம நகரில் உள்ள பொதுக் கழிவறை முறையான பராமரிப்பு இன்மையால் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு செல்லும் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏராளமான மக்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் மஹரகம பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நகரில் உள்ள பொது கழிப்பறைகள் மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முறையான பராமரிப்பு இல்லை
சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் கழிப்பறை சீரமைக்கப்பட்டபோதும் , முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்துவதில் தற்போது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது கனமழையால் கழிவறையில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து நகரின் வடிகால் அமைப்பில் சேர்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதனால் மஹரகம பொதுச் சந்தையில் வியாபாரம் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை கழிவறை அமைப்பிற்கு மிக அருகாமையில் உள்ள மஹரகம நகரசபை இருந்தும், இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்வும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.