;
Athirady Tamil News

சோடா குடிக்கச் சென்ற பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்., லொட்டரியில் ரூ.3 கோடி பரிசு

0

சோடா குடிக்க கடைக்கு சென்றபோது எதார்த்தமாக லொட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு விழுந்துள்ளது.

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஜேனட் பெயின் (Janet Bain) என்ற பெண்ணுக்கும் அப்படித்தான் இது நடந்தது.

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வசிக்கும் ஜேனட் பெயின் வேலைக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் சோடா வாங்க நின்றுள்ளார். அங்கு ஒரு லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

தற்செயலாக வாங்கிய அந்த லொட்டரி சீட்டுக்கு அவர் கனவிலும் நினைத்து பார்க்காத அளவுக்கு பணம் பரிசாக கிடைத்தது. அவருக்கு 1,00,000 அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.3.27 கோடி) பரிசு விழுந்தது.

இதை அறிந்த அவள் அதிர்ச்சியடைந்தாள். பரிசுத்தொகையைப் பற்றி அறிந்தபோது தனது கால்கள் கீழே தரையில் இருப்பதையே உணரவில்லை என்று அவர் கூறினார். தற்போது அந்தப் பணத்தை எப்படி செலவிடுவது என்று யோசித்து வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வருவது இது முதல் முறையல்ல.. பிரித்தானியாவில் பால், பாண் வாங்க சென்ற பெண் அங்கு லொட்டரி சீட்டு வாங்கி லட்சக்கணக்கில் பரிசு பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸ் மாகாணத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது, கேரி லேசி என்ற பெண் சிகரெட் வாங்கச் சென்று 5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள லொட்டரியை வென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.