;
Athirady Tamil News

யாழில். அச்சுவேலியிலையே அதிக மழை

0

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் அச்சுவேலி பகுதியிலையே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழையும் , யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர் , வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர் , தெல்லிப்பழையில் 33.3 மில்லி மீற்றர் , நயினாதீவில் 29.1 மில்லி மீற்றர் , சாவகச்சேரியில் 24.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது என திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இன்றைய தினம் திங்கட்கிழமையும் யாழில் மழை பெய்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.