;
Athirady Tamil News

தென்மராட்சி இந்து மயானத்தை புனரமைக்க கோரிக்கை

0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிண முருங்கை இந்து மயானத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் நாவற்குழி கிழக்கு , கோவிலாக்கண்டி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய மூன்று ஊர்களையும் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் இந்து சமய குடும்பங்கள் இந்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

அந்நிலையில் குறித்த மயானம் நீண்ட காலமாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமையால் , ஏரி கொட்டகைகள் , மயானத்திற்கு செல்லும் வீதி என்பன மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றமையால் அவற்றை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.