;
Athirady Tamil News

சீனா: சுரங்க விபத்தில் 12 போ் மரணம்

0

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது:

ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

சீனாவில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிா்ச் சேதம் ஏற்பட்டு வந்தது. எனினும், சோங்கிங் பகுதியில் கடந்த 2020-ஆண்டு ஏற்பட்ட 2 சுரங்க விபத்துகளில் 39 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் சுரங்கப் பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டது.

அதிலிருந்து சுரங்க விபத்து உயிரிழப்புகள் குறைந்தாலும், அத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.