;
Athirady Tamil News

உயிர் நண்பனை கல்லால் அடித்தே கொன்ற இளைஞர்கள்! கூறிய காரணம்

0

தமிழக மாவட்டம் சேலத்தில் இளைஞர் ஒருவரை காதல் விவகாரத்தில் நண்பர்களே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை செய்து கால்வாயில் வீசிய நண்பர்கள்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்.

கூலித் தொழிலாளியான இவர் கடந்த வியாழக்கிழமை இரவில் இருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் பதறியுள்ளனர்.

அன்றைய தினம் அவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தனது நண்பரான வேணுகோபாலை கொலை செய்துவிட்டு கால்வாயில் வீசியதாக கூறி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஒப்புதல் வாக்குமூலம்
உடனடியாக வேணுகோபாலின் உடலை கால்வாயில் இருந்து மீட்ட பொலிஸார், ஆபிரகாமிடம் விசாரணையை தொடங்கினர்.

அப்போது தனது நண்பரின் சகோதரியை காதலிக்க வேணுகோபால் வற்புறுத்தியதால் ஆபிரகாம் கண்டித்துள்ளார் என தெரிய வந்தது.

அத்துடன் வேணுகோபாலுடன் தகராறு ஏற்பட்டதால், மதுபோதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லால் தாக்கி அவரை கொலை செய்துள்ளார் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.