;
Athirady Tamil News

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

0

நாட்டில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

இதன்படி, இன்றையதினம் (31-12-2023) முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

தற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு தற்போது, முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் இன்று முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.