;
Athirady Tamil News

கட்சியின் தலைமைத்துவம் வேண்டாம்: நிராகரிக்கும் சாணக்கியன்

0

அரசியலமைப்பை இன்னும் கற்றுக் கொண்டிருப்பதால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அனைத்து கட்சிகளிலும் உட்பூசல்கள் இருப்பது போன்று தமிழரசு கட்சியிலும் உட்பூசல்கள் உள்ளது இதுவே அரசியல்.

கட்சியில் தேவைப்படும் மாற்றம்
குறிப்பாக சொல்வதாயின், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறுபட்டவை.

அதேபோல, யாழ் குடாநாட்டில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏனைய வடமாகாண தீவுகளிலிருந்து வேறுபட்டவை.

இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதற்கு கட்சியில் ஒரு மாற்றம் தேவை.

அத்துடன், புதிய தலைவர் தேர்தெடுக்கப்படும் பட்சத்தில் கட்சியில் சாதகமான மாற்றங்கள் நிகழும் என நான் நம்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசியலைமைப்பில் சிக்கலான விடயங்களை நான் இன்னும் கற்றுக் கொண்டிருப்பதாலும் அனுபவங்களை பெற வேண்டியுள்ளதாலும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணமில்லை என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.