;
Athirady Tamil News

தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் வழங்கத் தீர்மானம்!

0

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது கொழும்பு வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியன இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் உடன்படிக்கையை மேற்கொண்டது.

இதன்போது இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர மூலமாக தேயிலை உரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஐந்து வகையான உரங்களை 2,000 ரூபாவாக குறைத்து விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.