;
Athirady Tamil News

அயோத்தியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புக்கள்

0

ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருவறையில் மூலவா் சிறி பாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதியன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது,பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற பிரதிஷ்டை நிகழ்வில் 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா்.

சிறி பாலராமா் பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, தரிசனத்துக்காக கடந்த 23ஆம் திகதி முதல் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்
இந்நிலையில், வார இறுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20 இலட்சத்துக்கு மேல் பக்தா்கள் அயோத்திக்கு வந்து ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களிலும், ராமா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகியுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு
இது தொடா்பாக உத்தர பிரதேச மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் அனில் ராஜ்பா் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையை மையப்படுத்தி அயோத்தியில் குறைந்தது 5 இலட்சம் நேரடி அல்லது மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும், எனவும் வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, அயோத்தி இளைஞா்கள் பலா் தொழில்முனைவோராக மாற வாய்ப்புள்ளது.” எனவும் தெரிவித்தார்.

மேலும், தேவை பெருகுவதால் சிறு வணிகா்களின் வா்த்தகம் விரிவடையும், வேலைவாய்ப்பில் உள்ளூா் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி, அடுத்த 2 ஆண்டுகளில் அயோத்தியில் செயல்பாட்டைத் தொடங்கவிருக்கும் 10க்கும் மேற்பட்ட சா்வதேச நட்சத்திர விடுதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

விரைவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன, உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை எளிதாக்க, அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து எங்கள் துறை பணியாற்றி வருகிறது’ என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.