;
Athirady Tamil News

அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ள தொழிற்சங்கங்கள்

0

அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர் சங்கங்கள் பலவும் அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளன.

துறைமுகம், மின்சாரம், தபால், சுகாதாரம், புகையிரதம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கி போன்ற பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் ஒன்று சேர்ந்துள்ளன.

சக்தி வாய்ந்த தொழிற்சங்கங்கள்
இந்நாட்டின் சக்தி வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முன்வந்துள்ளன.

மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுத்துறை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த பலமான கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இனிவரும் காலங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது குறித்த தொழிற்சங்கங்கள் ஓரணியில் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் உத்தேசித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.