;
Athirady Tamil News

அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

0

கிழக்கு சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, ஆனால் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அரபு ஊடகங்களை மேற்கோள்காட்டி IRNA இன் தகவலின்படி, திங்கள்கிழமை அதிகாலை சிரியாவின் Deir ez-Zour மாகாணத்தில் அல்-ஒமர் எண்ணெய் வயல் பகுதியில் அமைந்துள்ள தளத்தை ஏவுகணை தாக்கியது.

அடிக்கடி தாக்குதல்
இந்த தளம் சமீபத்திய மாதங்களில் மீண்டும் மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது.

கொனிகோ எரிவாயு வயலில் அமைந்துள்ள அதே இராணுவ தளத்தின் மீது இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தளம் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.