;
Athirady Tamil News

யாழ் இளைஞரை மோசம் செய்த தென்னிலங்கை இளைஞர் ; மக்களே அவதானம்!

0

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நெல்லியடி , கரணவாய் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடனேயே தென்னிலங்கை இளைஞர் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

7 லட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்
குறித்த தென்னிலங்கை இளைஞர் கரணவாய் சோழங்கன் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் பார்த்தீபன் என்ற இளைஞருடன் நட்பாக பழகிவந்துள்ளார் இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி கடை ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வர மோட்டார் சைக்கிளை தருமாறு இரவல் கேட்டுள்ளார்

தென்னிலங்கையருடன் நட்பாக பழகிய காரணத்தினால் தனது Pulsar 220 black colour பெறுமதி ரூபா 700,000 , வகை மோட்டார் சைக்கிளை கரணவாய் சோழங்கன் இளைஞர் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவான தென்னிலங்கை இளைஞரின் தொலைபேசியும் இயங்கவில்லை என்பதுடன் , அவர் பணிபுரிந்த பூ கடைக்கும் குறித்த இளைஞர் வருவதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த யாழ் இளைஞர் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸாரிடச்ம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.