;
Athirady Tamil News

நானுஓயாவில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: 8 பயணிகள் வைத்தியசாலையில்!

0

நானுஓயா ரதெல்ல குறுக்கு வழி வீதியில் சற்றுமுன்னர் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தறை பிரதேசத்தில் இருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.