;
Athirady Tamil News

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றது.

ஊடகவியலாளரை அச்சுறுத்திய பொலிஸார்
விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதே வேளை சம்பவ இடத்திற்கு மருதங்கேணி பொலிசாரும் சிவில் உடையில் வந்திருந்தனர். இந்நிலையில் விபத்து அறிந்து செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது சிவில் உடையில் வந்த பொலிசார் தடுத்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன் ஊடகவியலாளரை அச்சூரூஈ, ஊடகவிலயாளின் ஊடக அட்டை,மோட்டார்சைக்கிள் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.