;
Athirady Tamil News

சாந்தன் உடலை காண நளினி வருகை!

0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இன்று உயிரிழந்த நிலையில், அவரின் உடலை காண நளினி வந்துள்ளார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

இதற்கிடையே இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் திவீர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலை 7.50 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலை காண நளினி வருகை தந்துள்ளார்.

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.