;
Athirady Tamil News

அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் நெதன்யாகு : ரபா மீது போர்தொடுக்கும் திட்டத்தால் சர்ச்சை

0

ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் ரபா நகருக்குச் செல்வோம், போரில் இருந்து நாங்கள் விலக போவதில்லை, எனக்கென ஒரு சிவப்பு கோடு உள்ளது, அது என்னவென்பதும் உங்களுக்கு தெரியும், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதியன்று எதிர்பாராத வேளையில் நடந்த பிரச்சினை மீண்டும், ஒருபோதும் நடக்காமல் இருப்பதற்கான விடயத்தையே நாங்கள் முன்னெடுத்துள்ளோம்” என்றார்.

போர் நிறுத்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்து வரும் கடுமையான போர் சூழலிடையே, அமெரிக்க அதிபர் பைடன் அளித்த பேட்டியின்போது, உயிரிழப்புகளை குறைக்க தவறிய நெதன்யாகு, இஸ்ரேலுக்கு உதவுவதற்கு பதிலாக கூடுதலாக வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.

போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியபோதும் அதனை ஏற்காமல் தொடர்ந்தும் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இது இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு முரணானது, அது ஒரு பெரிய தவறு என்றே தான் நினைப்பதாகவும், சர்வதேச நிலைப்பாட்டின் மீது இஸ்ரேல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு தான் கவலையடைவதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள்
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் போரானது நான்கில் 3 பங்கு நிறைவடைந்து விட்டது என்றும், இன்னும் ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும், 6 அல்லது 4 வாரங்கள் அதற்கு எடுக்கும் என்று நெதன்யாகு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.