;
Athirady Tamil News

புகைப்படத்தால் உருவான குழப்பம்… மன்னிப்புக் கேட்ட இளவரசி கேட்

0

அறுவை சிகிச்சைக்குப் பின் நீண்ட நாட்களாக பொதுவெளியில் தோன்றாத இளவரசி கேட் முதன்முறையாக அன்னையர் தினத்தையொட்டி ஞாயிறன்று புகைப்படம் ஒன்றை வெளியிட, இளவரசிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்திலிருந்த நிலையில், வெளியான புகைப்படத்தால் குழப்பம் தீருமென பார்த்தால், புதிய குழப்பம் ஒன்று உருவாகிவிட்டது.

புகைப்படத்தால் உருவான குழப்பம்
இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படத்தில், அவர் தன் மூன்று பிள்ளைகளுடன் நிற்க, அவர்களுடன் இளவரசர் வில்லியம் இல்லை. கூடவே, இளவரசி கேட் விரலில் அவருடைய திருமண மோதிரத்தையும் காணவில்லை. ஏற்கனவே, இளவரசியும் இளவரசர் வில்லியமும் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், வெளியான புகைப்படம் குழப்பத்தை அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து அந்த புகைப்படத்தை பகிரவேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்படவே, பரபரப்பு அதிகமானது.

மன்னிப்புக் கேட்ட இளவரசி கேட்
இந்நிலையில், குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம் தொடர்பில் இளவரசி கேட் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று இளவரசி கேட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பல அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களைப் போல, நானும் எப்போதாவது புகைப்படங்களை எடிட் செய்து பார்ப்பதுண்டு.

அவ்வகையில், நேற்று நாங்கள் பகிர்ந்த குடும்பப் புகைப்படம் உருவாக்கிய குழப்பங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். எல்லோரும் மகிழ்ச்சியான அன்னையர் தினத்தைக் கொண்டாடினீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் இளவரசி கேட்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.