;
Athirady Tamil News

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்…!

0

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினமே (11) குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர்
இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.